Jul 18, 2011

தெய்வ திருமகள் - கர்ச்சீப் கொண்டு போங்க.




தான் பெற்ற மகளை இழந்து தவிக்கும் ஒரு குழந்தை மனசுள்ள தந்தை கஷ்டப்பட்டு தன் அன்பு மகளை மீட்டு தன்னுடன் வைத்துக்கொள்ள போராடும் (ஒரு பாசத் தலைவனின்) பாசப்போராட்டம் தான் "தெய்வ திருமகள்".

படம் ஆரம்பம் முதலே தன் நடிப்பால் அசத்தும் அந்த தந்தையின் நடிப்பு மக்கள் அனைவராலும் கொண்டாடப் படுகிறது. பதிவர்களும் தங்கள் பங்குக்கு படத்தை பற்றி ஆகா ஓகோ வென்று புகழ்ந்து தள்ளியுள்ளனர். விழுந்து, தவழ்ந்து கஷ்டப்பட்டு நடித்த ஹீரோவுக்கு கண்டிப்பாக இந்த வருட தேசிய விருது உண்டு என்றும் ஆருடம் கூறுகின்றனர்.

படத்தின் கதையின் படி , கள்ளம் கபடம் அறியாத தந்தையும், மகளும் சென்னையில் சந்தோசமாய் வாழ்ந்து வருகின்றனர். தந்தை அந்த ஊரில் உள்ள ஒரு பீர் பாக்டரியில் வேலை செய்து அந்த குழந்தையை படிக்க வைக்கிறார். ஹீரோவுக்கு பீர் பாட்டில்களை சரியாக பெட்டியில் அடுக்கி சரியாக இருக்கிறதா? என எண்ணி பார்க்கும் வேலை.

இப்படியிருக்க கனி பள்ளிக்கூடம் செல்லும் இடத்தில் அங்கே தாளளராக இருக்கும் நிராராடியா என்கிற பெண்ணுக்கும், கனிக்கும் ஒரு பிரிக்க முடியாத பாச பந்தம் ஏற்படுகிறது. இவர்களுக்கு இடையேயான வசனங்களை மட்டும் தனியே ஆடியோவாக ரிலீஸ் செய்யும் அளவுக்கு உலக தரம் வாய்ந்தவை. ஆனால் பிரச்சினை நிராராடியாவின் மூலமாக வருகிறது என்பது தான் படத்தின் ட்விஸ்ட்.

ஒரு இளவரசி போல தன் தந்தையின் பாதுகாப்பில் சென்னையில் வாழ்ந்து வரும் அந்த கவிதாயினி குழந்தையை, கூடா நட்புகள் டெல்லி கூட்டி சென்று போய் தங்கள் வீட்டில் சிறை வைக்கின்றனர்.

அதன் பின் என்ன ஆகிறது?
தந்தை எப்படி தன் மகளை மீட்கிறார்?
பரபரப்பாக போகும் திரைக்கதையில் "கடைசியில் கனி யாருக்கு?" என்று தெரிந்து கொள்ள படத்தை வெள்ளி திரையில் காண்க.



தன் அருமை மகளை தேடி, தன்னந்தனியாய் டெல்லியில் அலையும் அந்த தந்தை பரிதவிக்கும் காட்சியில் மனம் பதறுகிறது.

தன் தாய்மொழியில் ஒழுங்காக நாலு வார்த்தை சேர்த்து பேச முடியாத சூழ்நிலையில், ஹிந்தி தெரியாமல் அவர் ரோட்டில் பார்க்கும் எல்லோரிடமும் "கனி" "கனி" என்று தமிழில் புலம்பியபடியே டெல்லியில் சுற்றி அலைவது பரிதாபம்.

இந்நிலையில் கனியை மீட்க இந்தியாவின் மிகவும் பிரபலமான வக்கிலிடம் தஞ்சம் அடைகிறார். இவருக்காக அவர் பல லட்சம் காசு வாங்கி கொண்டு வாதாட ஒப்பு கொள்கிறார். கோர்ட்டில் பிரபல வக்கிலுக்கும் எதிர் தரப்பு வக்கிலுக்கும் நடக்கும் வாதங்கள் மிகவும் சுவாரஸ்யம்.

படத்தின் வசனங்கள் எல்லாமே ஷார்ப். உதாரணமாக, கோர்ட்டில் நடக்கும் கேஸ் தொடர்பாக ஒரு பெண் நிருபர் எழுப்பும் கேள்விக்கு "நீயும் ஒரு பெண்தானே?", " இதயம் இருப்பதன் அடையாளம், கேள்வி கேட்காமல் இருப்பது" என்று சொல்லும் வசனம் டாப்.

கிளைமேக்ஸ் காட்சிகளில் கூண்டில் நின்று கொண்டு "எனக்கு கனி வேணும். நான் கனிய நல்லா பார்த்துக்குவேன்" என்று கதறும் காட்சியில் நம்மோடு சேர்த்து, நீதிபதியாக வரும் முண்டாசு தாத்தா மன்மோகனும் கண்கலங்குகிறார். "என்ன இருந்தாலும் இந்த கேஸ் சட்டத்தின் மேற்பார்வையில் நடப்பதால், தன்னால் எதுவும் செய்ய முடியாது" என்று நா தழுதழுக்க தன் இயலாமையை எடுத்து கூறுகிறார்.

ஒரு தொப்புள் காட்சி, அக்குள் காட்சி என்று துளியும் ஆபாசம் இல்லாமல் நீண்ட நாள் கழித்து வந்த ஒரு குடும்ப படம்.

"உங்கள் குழந்தை பருவத்தில் தான் நீங்கள் கடைசியாக அழுதது. அதற்கு பிறகு எதற்கும் அழுததில்லை என்று சீன் போடுபவரா நீங்கள்?" 

இதோ இந்த படம் உங்களுக்காக தான்.

கனியை கூட்டி சென்று சூடு போட்டு கொடுமை படுத்தியதால் வந்த கொப்புளத்தை பார்த்து கனியின் தந்தை வெந்து உருகுவதில் உங்கள் கல் நெஞ்சமும் கரையக் கூடும். கண்ணீர் துடைத்து கர்ச்சீப் நனைந்து விட்டால், கர்ச்சீப்பை இறுக்கி பிழிந்து முன் சீட்டில் காயப் போடுங்கள்.


இப்படம் நூறு நாளை கடந்து மக்களின் நல்லாதரவால் ஆரவாரமாகவும் அழுகாச்சியாகவும் ஓடி வரலாற்று சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை.

Related

தெய்வ திருமகள் - நமீதா விமர்சனம்



8 comments:

  1. ஹா ஹா ஹா.. வாய்விட்டு சிரிச்சிட்டேன்...

    ReplyDelete
  2. தலைப்பிலேயே அசத்திட்டீங்க..அருமை...

    ReplyDelete
  3. அடக் கண்றாவியே, இது அத்தனையும் வெறும் நடிப்புதானா, அப்போ ஊழல் பேர் வழிங்க யாரும் மாட்ட மாட்டாங்களா?

    ReplyDelete
  4. elanam seiya kudathu...headache-kum toothache-kum, thanakku vandal than theriyum...

    ReplyDelete
  5. "Kani iruppa kaai kavarnthatru" sonnathu intha "kani" thaana? Kani azhuki poche?

    ReplyDelete
  6. ஆட்சியை விட்டு அகன்றாலும் உவமைப் படமாய் பயன்படுவேன்
    - கலைஞர்

    படங்கள் அருமை....

    என் விமர்சனத்தை ஒரு முறை பாருங்களேன் நேரமிருப்பின்

    http://www.tamiltel.in/2011/07/blog-post_3769.html

    ReplyDelete