Aug 22, 2012

தனி துறையாகிறது, டாஸ்மாக்!

டாஸ்மாக் என்பது தமிழ்நாட்டு பட்ஜெட்டின் நதிமூலம் ரிஷிமூலம் ஆகிவிட்டதால் அதற்கென்று ஒரு தனித்துறையை உருவாக்குகிறது அரசு.

இச்செய்தி தமிழ்நாட்டு குடிமகன்களின் காதில் பீராய் பாய்ந்து, ஏகபோக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ் நாடு அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக ஒரு செய்தி உலவி கொண்டிருக்கிறது. இந்த செய்தியை நம்பி தமிழக குடிமக்கள் அக்டோபர் மாதம் பாண்டிச்சேரிக்கு பஸ்சிலும், ட்ரெயினிலும் டிக்கெட் ரிசர்வ் செய்து விட்டனர். சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்களும் தீர்ந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

"தற்போது உலவிக் கொண்டிருக்கும் செய்தி வெறும் வதந்தி தான்! அதை யாரும் நம்ப வேண்டாம்" என அமைச்சர் பன்பீர் செல்வம், நமது TFN-க்கு செய்தியளித்தார்.

இந்த வதந்தியை தடுக்க சிறிது நாட்களுக்கு Group Message வசதியை தடை செய்ய செல்போன் கம்பனிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட்டு கை நடுங்க தேவையில்லை எனவும் தெரிவித்தார்.



டாஸ்மாக் தனித்துறையாக மாற்றப் பட்ட பிறகு கீழ்க்கண்ட கவர்சிகரமான, தூக்கலான திட்டங்களை அரசு அறிமுகப் படுத்துகிறது.

கடன் அட்டை வசதி: இனி பில்லிங் மெசின் சிஸ்டத்தை நடைமுறை படுத்த உள்ள நிலையில், சில்லறை பிரச்சினையை தடுக்கவும், ஏழை எளியோரும் கடன் வாங்கியாவது சரக்கு வாங்கி, மட்டையாவதற்கு உதவியாக கிரெடிட் கார்டு பேமென்ட் வசதி வரவுள்ளது.

டாஸ்மாக் கார்ட்: Lifestyle போன்ற துணிக்கடையில் இருப்பது போல, வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் விதமாக டாஸ்மாக் கார்ட் அறிமுகப் படுத்தப் படுகிறது. இதன் மூலம் நீங்கள் வாங்கும் சரக்கின் விலை கணக்கெடுக்கப்பட்டு, அது ஐயாயிரம் ரூபாயை அடையும் பட்சத்தில் உங்களுக்கு ஒரு பாரின் சரக்கு இலவசமாய் கொடுக்கப் படும். அது ஐம்பதாயிரம், லட்சம் என தாண்டும் போது Elite, Premium என நிறைய பிரிவுகளில் கார்டுகள் Upgrade செய்யப் பட்டு, வாங்கும் ஒவ்வொரு சரக்கிற்கும் 5%, 10% தள்ளுபடி கொடுக்கப் படும்.

ஹோம் டெலிவரி: ரூபாய் ஆயிரத்திற்கு மேலாக சரக்கு வாங்குபவர்களுக்கு ஹோம் டெலிவரி செய்யப்படும். இதனால் கூட்ட நெரிசலை கட்டுபடுத்தவும், தேவையில்லாத சண்டைகளை தவிர்க்கவும் வழிவகை செய்யப் படும்.

காப்பீட்டு திட்டம்: சரக்கு அடித்து வயிறு புண்ணாகும் குடிமகன்களின் நலன் கருதி அவர்களுக்கு அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலமாக தேவையான மருத்துவ சேவையை அளிக்கவும் வசதி செய்யப் படும். மப்பு அதிகமாகி, டாஸ்மாக் வாசலிலேயே விழுந்து கிடக்கும் அன்பர்களை தூக்கி கொண்டு போய் அவரவர் வீட்டு வாசலில் போட ஆம்புலன்ஸ் வசதியும் வருகிறது. 

குடிப்போர் நலச் சங்கம்: இதன் மூலம் குடிமகன்களின் பிரச்சினை கேட்டறிந்து துரித நடவடிக்கை எடுக்க படும். "டூப்ளிகேட் சரக்கு", "கூலிங் இல்லாமை" போன்ற தங்கள் குறைகளை சங்கத்திற்கு சொல்ல ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் புகார் பெட்டி ஒன்று வைக்கப் படும்.

டபுள் டமாக்கா: இரவு பத்துமணிக்கு மேல் பிளாக்கில் சரக்கு விற்பதை தடுக்க, அரசே அதை இரட்டிப்பு விலையில் விற்கும். இந்த விலை காலை ஆறு மணி வரை நடைமுறை படுத்தப் படும்.

போலிஸ் பாதுகாப்பு: இங்கு அதிக கலெக்சன் ஆவதால் பணம் கொள்ளை அடிப்பதை தடுக்கவும், ஆயுதம் ஏந்திய போலீசார் ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் தள்ளாடாமல் நிறுத்தப் படுவர். முதல் முறை குடித்து விட்டு பிரச்சினை பண்ணுபவரும், குடிக்காமலே பிரச்சினை பண்ணுபவரும் லாக்கப்பில் அடுத்த நாள் காலை வரை அடைக்க படுவர்.




இந்த திட்டத்தை பீர் குலுக்கி வரவேற்று பேசிய "தூ.தி.மு.க" கட்சி தலைவர் குஜயகாந்த், "அடுத்த தேர்தலிலும் ஆளும் கட்சியை, தங்கள் கட்சி சப்போர்ட் செய்ய வேண்டுமானால், டாஸ்மாக் துறையை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்" என தெயிவித்தார்.

டாஸ்மாக்கை தனி துறையாக மாற்றுவதை எதிர்த்து "மாங்கா" கட்சி தலைவர் ரோமதாஸ் அவர்கள் காத்ரினாவின் தலைமையில் நாடு தழுவிய பூட்டு போடும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். தன் கட்சி சின்னதை கூட "மாங்கா"விலிருந்து, பூட்டிற்கு மாற்றப் போவதாய் தெரிவித்தார்.


டெயில் இமேஜ்:




Related Post: 

டாஸ்மாக் உங்களை அன்புடன் வரவேற்கிறது - ஆபாயில்


May 5, 2012

சாரு race for ஜனாதிபதி போஸ்ட்



ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை முன் நிறுத்த, பா.ஜா.க அப்துல் காலாமை களத்தில் இறக்க, இந்த ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு பெரும் அனல் பறக்கும் போட்டி இருந்து வந்தது. இந்த க்ளாடியேட்டர் களத்தில், இப்போது சாருவும் குதிக்கிறார். அதனால் போட்டி இன்னும் உக்கிரம் அடைந்துள்ளது. இந்த செய்தி வட இந்திய சேனல்களை எல்லாம் பரபரக்க, வாயில் நெருப்பை ஊதி fire டான்ஸ் ஆட வைத்துள்ளன.

சாருவிடம், இந்த ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எண்ணம் எப்படி வந்தது? என்று Tamil Faking News சார்பாக பேட்டி எடுக்கையில்,

"ஒரு எழுத்தாளன் என்பவன் உலகம் முழுதும் சுற்றினால் தான், நல்ல உலக தரமான இலக்கியம் படைக்க முடியும். சொந்த காசில் ஊர் சுற்ற வேண்டும் என்றால், அந்த எழுத்தாளன் எழுதும் புத்தகம் லட்சக்கணக்கில் உலகம் முழுதும் விற்க வேண்டும். ஆனால் நான் எழுதிய "எச்சைல்" புத்தகத்தின் விற்பனை ஐயாயிரத்தை தாண்டியுள்ளதை தமிழ்நாட்டில் "கின்னஸ் சாதனை" என்று சொல்கிறார்கள். எனக்கு ரசிகர்கள் அதிகம் உள்ள கேரளாவின் இந்த புத்தகத்தை டப் செய்து வெளியிட்டாலும், மேலும் ஒரு பத்தாயிரம் விற்கலாம். புத்தகம் வெளியிடுவது முதல், ரெமிமார்டின், டக்கீலா, பிராண்டேட் ஜாக்கி ஜட்டி வரை வாங்க அனைத்திற்கும் வாசகர் வட்டத்தையே எதிர் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் ஐ.டி யில் வேலை செய்பவனுக்கு காண்டம் கூட, கம்பனியே வாங்கி கொடுத்து விடுகிறது. ஆனால் என்னால் இனிமேல் ஜாவாவையும், டாட் நெட்டையும் படித்து முடித்து ஐ.டி.யில் சேர முடியாது.

அதனால் இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அப்போது பிரதீபா பட்டில் வெளிநாடு சுற்றி கின்னஸ் சாதனை படைத்த செய்தி தெரிய வந்தது. அதனால் தான் உலக இலக்கியம் படைக்க இந்த வழியை தேர்ந்தெடுத்தேன். பிரான்ஸ், எகிப்து, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளை சுற்றி பார்த்தால் தான் நல்ல இலத்தீன் இலக்கியம் படைக்க முடியும். அதனால் எனக்கு ஆதரவு கொடுங்கள்" என்று சொன்னார்.


ஆனால் இவருக்கு எந்த கட்சி ஆதரவு கொடுக்கும் என்ற சந்தேகமும் எழுகிறது. தமிழ் நாடு காங்கிரஸ் இவரை ஆதரிக்குமா? என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் கருத்து கேட்ட போது,

"சாருவா? இந்த பேரை கேட்டதும், கும் பிகராக இருக்கும் என்றல்லவா நினைத்தேன்." என்றார்.

திராவிட கட்சியான தி.மு.க, சாருவிற்கு ஆதரவு தரும் என்பதாக தெரிகிறது. சாருவிற்கு, கனிமொழியுடன் உள்ள இலக்கிய தொடர்பும், நட்பும், இதற்கு காரணமாக சொல்லப் படுகிறது.


Mar 21, 2012

அடுத்த படத்தில் கமலுக்கு ஆஸ்கார்.

இந்திய சினிமா வரலாற்றில், நடிப்பில் ஆஸ்கார் அவார்ட் வாங்க திறமையான நடிகர் பல நூற்றாண்டுகளாக ஒரு நடிகர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அது ஒருவர் தான். 

"உலக" நாயகன் கமல் ஹாசன்.



ஹேராம், தசவதாரம், அவ்வை சண்முகி என நிறைய படங்கள் மூலம் தனது நடிப்பு திறமையால் ஆஸ்கார் வாசலை வரை போய், ஏதும் கிடைக்காமல் திரும்பி வந்தார்.

நடிப்பு திறமை மட்டுமல்லாது கமலின் மற்ற ரசனைகளும் அதிகமாய் மக்களிடையே பரவலாய் பேசப் படுகிறது. குறிப்பாக உலக மொழி படங்களை பார்க்கும் அவரது ரசனை. நிறைய உலக மொழி படங்களை பார்ப்பதனாலேயே அவருக்கு உலக நாயகன் என்ற அடைமொழி வந்ததாக ஒரு கருத்தும் நிலவுகிறது. 

அவரது காத்திருப்புக்கு இப்போது விடிவு காலம் வந்து விட்டது. செல்வராகவன், கமலை வைத்து இயக்கவிருந்த "விஸ்வரூபம்" படம் டிராப் ஆகி அதை வேறு ஒருவர் இயக்குகிறார். அதனால் செல்வராகவன் கமலை வைத்து மீண்டும் வேறு ஒரு படம் இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் கதையை பற்றி, செல்வராகவன் நமது Tamil Faking நியூஸ்-க்கு அளித்த பேட்டியில், "ஆஸ்கார் வாங்குவதே தன் குறிக்கோள் என்று பல நூற்றாண்டுகளாக போராடும் ஒரு உண்மையான கலைஞனின் கதை. கதையின் படி, ஹீரோ ஒரு சினிமா நடிகர். இவர் கஷ்டப் பட்டு நடித்த படங்களை காப்பி அடித்து, நடித்த ஹாலிவுட் ஹீரோக்கள் மிக பிரபலம் அடைந்து விடுகிறார்கள். பின்னர் மறுபடியும் கஷ்டப்பட்டு நடித்து படத்தின் கிளைமாக்ஸ் சீனில், கமல் ஆஸ்கார் வாங்குகிறார்." என்றார்.

ஹாலிவுட் நடிகர் கேரக்டர் உட்பட இந்த படத்தின் எல்லா கேரக்டர்களையுமே கமலே செய்யவிருப்பது இந்த படத்தின் சிறப்பம்சம். இதற்காக நிறைய கண்டைனர் லாரிகளில் மூட்டை மூட்டையாய் மைதா மாவுகள் வட நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் படவுள்ளன. 


Mar 19, 2012

கலைஞரின் அடுத்த உண்ணாவிரதம், சிரிப்பொலி டிவியில் நேரடி ஒளிபரப்பு

இலங்கையின் போர் குற்றத்திற்கு எதிரான, அமெரிக்க தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆரம்பிப்பதாக இருந்த, கலைஞரின் உண்ணாவிரதம் பெரும் வெற்றியடைந்தது.



இலங்கையில் நடைபெற்று கொண்டிருந்த போரை நிறுத்த கோரி, மெரீனா பீச்சில் அரை நாளுக்குள் அரங்கேற்றம் நடத்திய முதல் உண்ணாவிரத வெற்றி, உலகப் புகழ் அடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த செய்தி நியூயார்க் டைம்ஸ் இதழின் முதல் பக்க பெட்டி செய்தியில் அப்போது வெளியானது.

ஆனால் இவர் இரண்டாம் உண்ணாவிரதத்தால், முதல் உண்ணாவிரதத்தை முறியடித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவிருக்கிறார். சச்சினை போல தொடர் சாதனை புரிந்து அவுட் ஆகாமல், நூறு உண்ணாவிரதம் காண Tamil Faking நியூஸ் வாழ்த்துகிறது.

"கலைஞரின் உண்ணாவிரத செய்தி எங்களை எட்டியதும் எங்களுக்கு அவரது முதல் உண்ணாவிரதம் நியாபகம் வந்தது. இன்னொரு உண்ணாவிரதத்திற்கு இந்த உலகம் தாங்காது என்பதால் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம்" இவ்வாறு சோனியா நமது Tamil Faking நியூஸ்க்கு பேட்டியளித்தார். அருகில் இருந்த மன்மோகன் சின் ஆமாம் என்பது போல் தலையசைத்துக் கொண்டே இருந்தார்.

கலைஞர் தாத்தாவின் இந்த உண்ணாவிரத வெற்றியின் சூட்சுமம் என்னவாக இருக்கும் என்று வியப்பில் ஆழ்ந்துள்ளார் அன்னா ஹசாரே. "கலைஞரிடம் இருந்து அன்னா ஹசாரே எப்படி உண்ணாவிரதம் இருப்பது? என்பதை நிறைய கற்று கொள்ள வேண்டும்" என்று ராமதாஸ் தன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

இந்த தொடர் உண்ணாவிரத வெற்றியால், "அண்ணா நூற்றாண்டு நூலகம் இடித்தால் நான் தீக்குளிப்பேன்" என்று கலைஞர் அசட்டையாக தனக்கே தெரியாமல் உளறியதை வாபஸ் வாங்கி கொண்டு, அதற்கு பதில் அடுத்த வாரம் முதல் பெசன்ட் நகர் பீச்சில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் கூறினார். 

இதனால் பெசன்ட் நகர் பீச்சில் உண்ணாவிரதம் இருக்க தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு ஷாட் காட்சிகளை படம் எடுக்க, கலை இயக்குனர் தோட்டா தரணியை வைத்து ஒரு பிரமாண்ட செட் போட்டு வருகிறார்கள். கட்டில், மெத்தை மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் எல்லாம் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளனவாம். இரு மனைவிகள் சகிதம் கட்சி அடிப்பொடிகளுடன் தலைவர் அடுத்த வாரம் ஆஜர் ஆகிவிடுவார்.

                                 

இந்த விஷயம் கேள்விப் பட்டதும், போயஸ் கார்டன் பகுதியில் 1.6 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஹெக்டர் அளவுகோலில் பதிவானது.  

எடியுரப்பாவும் தன்  இழந்த முதல்வர் பதவியை மீட்க உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் கர்நாடகாவிலிருந்து நம் சிறப்பு நிருபர் தெரிவித்தார். இதைடுத்து பா.ஜா.க தலைமை இடத்தில் பதற்ற சூழ்நிலை நிலவுகிறது.