Mar 15, 2012

ரஜினியின் அடுத்த படத்தில், நித்தியானந்தா வீடியோவை கிராபிக்ஸ் பண்ணியவர்


தானும், தன்னால் பிரபலமான நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போல் வெளியான வீடியோ போலியானது என நித்தியானந்த சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இதனால், அதை உண்மையானது போல் மிக தத்ரூபமாக உருவாக்கிய அந்த முகம் தெரியாத கிராபிக்ஸ் நிபுணருக்கு, தமிழ் சினிமாவில் மிக பெரிய எதிர்காலம் உருவாகும் வாய்ப்புள்ளது.

சமீபத்தில் வெளியான "அரவான்" படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளின் தரம் மோசமானதாய் இருந்தது. கிராபிக்ஸை சரியாய் பண்ணியிருக்கும் பட்சத்தில் படத்திற்கு அது கூடுதல் பலமாக இருந்திருக்கும் என அதன் இயக்குனர் வசந்த பாலன் சொன்னார்.

இனி தன் படங்களிலும், ஹாலிவுட் ஆட்களை வைத்து, அதிக பணம் செலவழித்து கிராபிக்ஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று பிருமாண்ட இயக்குனர் சங்கர் தெரிவித்தார். ரஜினியும் அவரது படங்களில் அவரை வயது குறைவான ஆளாக காண்பிக்க செய்து, சச்சினை போல ரிடைர்டு ஆகாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கும் ஐடியா உள்ளதாக, உலக மகா நடிகர் கமல்ஹாசனுடன் கலந்தாலோசித்துள்ளதாக செய்தி கசிந்துள்ளது. 

"என்னுடன் முன்னணி நடிகைகள் யாரும் நடிக்க முன் வரவில்லை என்றால் கூட, இந்த கிராபிக்ஸ் நிபுணரை வைத்து, நான் ஏஞ்சலினா ஜோலியுடன் நடித்தது போல் படம் எடுத்து வெளியிடுவேன்" என்று தற்போதை முன்னணி நட்சத்திரம் "பவர் ஸ்டார்" சீனிவாசன் நமது Tamil Faking நியூஸ்-க்கு பேட்டியளித்தார். கடைசியாக இவர் நடிக்க கூப்பிட்டு, நடிகை ஹன்சிகா அவர்கள், இவரது முகத்தில் காரி துப்பியது குறிப்பிடத்தக்கது.




அந்த போலி வீடியோ வெளியான நேரத்தில், நடிகர் வடிவேலு கூட நித்தியானதா கெட்டப்பில் நடிப்பதாக செய்தி வெளியானது. அதை கேள்விப்பட்ட நித்தியானதா, வடிவேலுவை "என்னுடைய கெட்டபில் நடித்தால், நீ அட்ரஸ் இல்லாமல் போய் விடுவாய்" என எச்சரித்தார்.

அவரின் சொல்படியே வடிவேலு தமிழ் சினிமாவில் முகவரி தொலைந்து காணாமல் போய் விட்டார். 

அதனால் அந்த போலி வீடியோவை உருவாக்கிய முகம் தெரியாத நபரை உங்கள் யாருக்காவது தெரிந்திருந்தால், தமிழ் இயக்குனர்கள் சங்க தலைவர் எஸ்.எ.சந்திரசேகரிடம் சொல்லவும். நடிக்கவே தெரியாத தன் மகனுக்கும் உதவியாய் இருக்கும். தமிழ் சினிமா உலகம் உங்களுக்கு என்றும் கடமை பட்டிருக்கும்.



1 comment: